Monday, May 20, 2024
Home » கல்முனை ஸாஹிராவில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்முனை ஸாஹிராவில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு நிகழ்ச்சி

by mahesh
March 2, 2024 3:24 pm 0 comment

அம்பாறை மாவட்ட செயலகத்தின் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி உயர்தர மற்றும் மாணவர் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி அதிபர் எம்.ஐ ஜாபீர் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இதன் போது பாவனையாளர் உரிமைகள், பொறுப்புகள்,சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை, அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம். அப்துல் மலீக் கலந்து கொண்டார். இதில் பிரதான வளவாளராக அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளான இஷட்.எம் ஸாஜீத், எம்.எச்.எம். றிபாஜ் ஏ.பீ.எம் றிப்சாத் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

எம்.ஐ.எம்.அஸ்ஹர் (மாளிகைக்காடு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT