வட மாகாணத்தின் மைலோ கால்பந்தாட்ட சம்பியன்சிப் இறுதிச் சுற்றுக்கு 10 மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் மொத்தம் 16 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
கடந்த வார இறுதியில் (24) மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்கட்டப் போட்டிகளில் மொத்தம் 64 அணிகள் பங்கேற்றிருந்தன. இதில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை 12 மற்றும் 10 வயதுக்குட்பட்ட அணிகள் ஆடவர் பிரிவில் வெற்றியீட்டின. அதேபோன்று 12 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவில் மன்னார் இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலயமும் 10 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவில் மன்னார் அடம்பன் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் வெற்றியீட்டின.
இறுதிச் சுற்றுப் போட்டி எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் அடிமட்ட விளையாட்டுகளை வளர்ப்பதற்கும், விளையாட்டுகளில் பாலின பன்மைத்துவத்தை மேம்படுத்துவதற்குமான தனது பயணத்தில், இலங்கையின் எதிர்கால சந்ததியினரை வளப்படுத்தும் நோக்குடன் இந்த நிகழ்வுக்கு நெஸ்லே மைலோ அனுசரணை அளிக்கிறது.