Sunday, May 19, 2024
Home » Online இல் கொடுப்பனவு செலுத்தும் திட்டம்
கல்முனை மாநகர சபையில்

Online இல் கொடுப்பனவு செலுத்தும் திட்டம்

by mahesh
February 28, 2024 10:00 am 0 comment

கல்முனை மாநகர சபையில் Online மூலம் கொடுப்பனவு செலுத்தும் ‘CAT-20 Payment System’ நேற்று செவ்வாய்க்கிழமை (27) அம்மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கல்முனை மாநகர சபையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடியை கவனத்தில் கொண்டு, நிதிப் பிரிவை ஒழுங்குமுறைப்படுத்தி, மோசடியை முற்றாகத் தவிர்த்து, நம்பகமான முறைமையை நடைமுறைப்படுத்தும் வகையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சபை என்பவற்றின் அங்கீகாரம் பெற்ற வயம்ப அபிவிருத்தி அதிகார சபையின் CAT-20 எனும் செயலி, யூ.என்.டி.பி. நிறுவனத்தின் அனுசரணையுடன் சில மாதங்களுக்கு முன்னர் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் ஓரங்கமாகவே Online மூலம் கொடுப்பனவு செலுத்தும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT