கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், நடத்தப்படும் சோதணை கருமபீடங்களில் தாமதம் ஏற்பட்டதற்கு தற்காலிக, திட்டமிடப்படாத செயற்பாட்டு நிலைமைகளே காரணம் எனவும், எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையுமல்ல எனவும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் வலியுறுத்தியுள்ளது. சோதணை கருமபீடங்களில் செயல்பாடுகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், தாமதத்தால் சிரமத்திற்குள்ளான தனது பயணிகளிடம் மன்னிப்புக் கோருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அவ்வாறானதொரு நிலை இனிமேலும் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் ஈடுபட்டுள்ளது.
நேற்று (25) காலை ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸிற்கு சொந்தமான 04 விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாகவும், களப்பணியாளர்கள் சில பணிகளை செய்யாமல் தவிர்த்ததால் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.