92
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் சுகாதார சேவையின் அம்புலன்ஸ்கள் உள்ளிட்ட போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 40,000 மெட்ரிக் தொன் டீசல் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகையை உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது. பெறப்பட்ட டீசல் விநியோகத்திற்காக எரிபொருள் மேலாண்மை தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டது. மேலும் இந்த அமைப்பில் எரிபொருளைப் பெற்ற வாகனங்கள், பெறப்பட்ட எரிபொருளின் அளவு மற்றும் சுகாதார நிறுவனங்கள் பற்றிய அனைத்து தகவல்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.