யாழ்ப்பாண நகரில் இனிவரும் காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் இசை நிகழ்ச்சிகள் தனது கண்காணிப்பின் கீழ் நெறிப்படுத்தப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தமது நெறிப்படுத்தல்கள் இல்லாமையும் ஒரு காரணமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு எங்களுடைய இளைஞர்களை பலரும் குறை கூறுகின்றனர். நிகழ்ச்சியில் இளைஞர்கள் சிலர் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் அறிந்து கொண்டேன்.
நிகழ்ச்சி தொடர்பில் யாழ். மாநகர சபை மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் கூடிய கவனம்
செலுத்தியிருக்க வேண்டும். நானும் அதனை பார்த்திருக்க வேண்டும். நானும் அது தொடர்பில் கரிசனை இல்லாமல் இருந்து விட்டேன்.
இனிவரும் காலங்களில் இப்படியான நிகழ்ச்சிகள் நடைபெறுமாக இருந்தால் , மக்கள் பிரச்சினைகளின்றி மகிழ்ச்சியாக நிகழ்வுகளைக் கண்டுகளிக்கக் கூடியவாறான ஏற்பாடுகளைச் செய்வோமெனவும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.