எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஆளும்கட்சியில் இணையவுள்ளவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ள உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலே, இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கும் அரசியலுக்கும் தேவையற்றவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போற்றி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
இந்நிலையிலே, அவரது அணியைச் சேர்ந்த பலர் ஆளும் கட்சியில் விரைவில் இணையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதனால், பாராளுமன்றத்தில் பாரிய மாற்றம் ஏற்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.