Thursday, May 16, 2024
Home » கட்டுத்துவக்கில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

கட்டுத்துவக்கில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

by Gayan Abeykoon
February 15, 2024 1:00 am 0 comment

கெப்பித்திக்கொள்ளாவ இந்திகஹஹேன பகுதியில் கட்டுத்துவக்கில் சிக்கி இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக எட்டவீரகொள்ளேவ பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (13) மாலை எட்டவீரகொள்ளேவ பொலிஸ் பிரிவின் இந்திகஹஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.எட்டவீரகொள்ளேவ, பாளிக்கம பகுதியை வசிப்பிடமாக கொண்ட 44 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, உயிரிழந்த நபர் தனது சேனைப் பயிர்ச் செய்கையினை காட்டு விலங்குகளில் இருந்து பாதுகாப்பதற்காக வேண்டி கட்டப்பட்டிருந்த கட்டுத்துவக்கில் சிக்கியே உயிரிழந்துள்ளார் என்பது மேலும் தெரியவந்துள்ளது.

அநுராதபுரம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT