Home » இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம்

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம்

by Gayan Abeykoon
February 15, 2024 6:26 am 0 comment

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று பிற்பகல் 12 மணியளவில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் பாராளுமன்ற உறுப்பினர்களது பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், பிரதேச சபை செயலாளர், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை, யானை வேலி அமைத்தல், வீதி அபிவிருத்தி, வீடு, காணி பிரச்சினைகள் அத்துடன் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

ஓமந்தை விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT