Friday, May 17, 2024
Home » சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் சந்தேகத்தில் கைது

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் சந்தேகத்தில் கைது

by Gayan Abeykoon
February 15, 2024 1:00 am 0 comment

சட்டவிரோதமான முறையில் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கியொன்றினை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கிரிபாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய 13 ஆம் திகதி  காலை கிரிபாவ பொலிஸ் பிரிவின் தமுத்த  பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் துப்பாக்கியொன்றையும் குற்றத்தடுப்பு பிரிவு  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் 32 வயதுடைய கிரிபாவ தமுத்த பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அநுராதபுரம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT