அட்டுலுகம பகுதியில் ஒன்பது வயதுச்சிறுமி ஆயிஷாவை கொலை செய்த குற்றவாளிக்கு 27 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை உயர் நீதிமன்றம் நேற்று (13) இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 30 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பில் அறிவித்துள்ளது. இச்சிறுமி கடந்த 2022 இல்,கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பண்டாரகம, அட்டுலுகம பகுதியில் இடம்பெற்ற இந்த கொலைச் சம்பவம் முழு நாட்டையும் உலுக்கியது. கோழி வாங்குவதற்காக வீட்டுக்கருகில் உள்ள கடைக்குச் சென்ற ஒன்பது வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமி காணாமலாகியிருந்தார்.
இந்நிலையில், மறுதினம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்திலிருந்து இச்சிறுமி சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.