இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (14) பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறவுள்ளது.
இலங்கை அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக சகலத்துறை வீரர்களான சாமிக்க கருணாரத்ன மற்றும் துனித் வெள்ளாலகே அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எனினும் அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் ஆடவேண்டி இருப்பதால் அதற்கு தயாராகும் வகையில் இன்றைய போட்டியை இலங்கை அமைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
குறித்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.