இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (09) பி. ப. 2.30 மணிக்கு பல்லேகலவில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய உற்சாகத்துடனேயே இன்றைய போட்டியில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடருக்கான இலங்கைக் குழாம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க நீக்கப்பட்டதோடு அவருக்கு பதில் சாமிக்க கருணாரத்ன அழைக்கப்பட்டுள்ளார்.
ஹஷ்மதுல்லா ஷஹிதி ஆப்கான் அணிக்கு தொடர்ந்து தலைவராக செயற்படவிருப்பதோடு மட்டுப்படத்தப்பட்ட ஓவர்களுக்காக முஹமது நபி, ரஹ்மானுல்லா குர்பால் மற்றும் பஸால் ஹக் பரூக்கி ஆப்கான் அணியில் இணைந்துள்ளனர்.
எனவே, டெஸ்ட் போட்டியை விடவும் ஆப்கான் ஒருநாள் அணி இலங்கைக்கு அதிக சவாலாக அமையவுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை அணியின் ODI குழாம் அறிவிப்பு