பயங்கரவாத எதிர்ப்பு எனும் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் 06 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதன்படி இச்சட்டமூலத்துக்கு எதிராக இதுவரை 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2024 ஜனவரி 23ஆம் திகதி தனது அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட ஆறு மனுக்கள் மற்றும் 2024 ஜனவரி 24 ஆம் திகதி தனது அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட பதினெட்டு மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் 06 மனுக்களின் பிரதிகள் தனக்கு கிடைத்திருப்பதாகவே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (08) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.