Monday, May 20, 2024
Home » கூரிய ஆயுதங்களால் தாக்கி மீனவர் கொலை

கூரிய ஆயுதங்களால் தாக்கி மீனவர் கொலை

by mahesh
February 7, 2024 11:30 am 0 comment

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாவெல்ல பகுதியில் நேற்றையதினம் (06) கூரிய ஆயுதங்களால் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நகுலகமுவ, மத்தியம் குடாவெல்ல, மிஹிர பகுதியை சேர்ந்த 52 வயதுடைய கொக்கு ஹன்னடிகே அருண கீர்த்தி என்ற மீனவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது வீட்டிற்கு வந்த சந்தேகநபர்கள் மீனவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT