Monday, May 13, 2024
Home » காணி உறுதிப்பத்திரம் வழங்கும் தேசிய நிகழ்வு பெப்ரவரி 05 இல்.

காணி உறுதிப்பத்திரம் வழங்கும் தேசிய நிகழ்வு பெப்ரவரி 05 இல்.

by sachintha
February 2, 2024 6:50 am 0 comment

பத்தாயிரம் பேருக்கு காணி உரிமைகள்

 

சுபீட்சமான எதிர்காலம் என்ற தொனிப்பொருளின் கீழ் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘உருமய’ வேலைத்திட்டத்தில், விவசாய சமூகத்தினருக்கு அரசாங்க காணிகளில் முழுமையான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.இதற்கான

தேசிய வைபவம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் தம்புள்ளை ரன்கிரி விளையாட்டரங்களில் இம்மாதம் 05 இல்,நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

எந்தவொரு காணி உரிமையும் இல்லாத மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையில், உருமய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்நிகழ்வின் போது ரன்பூமி, ஜயபூமி மற்றும் சுவர்ணபூமி ஆகிய காணி உறுதிப்பத்திரங்கள் 10 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT