Monday, May 20, 2024
Home » பாதுகாப்பான புலம்பெயர்வு; திருமலையில் விழிப்புணர்வு

பாதுகாப்பான புலம்பெயர்வு; திருமலையில் விழிப்புணர்வு

by sachintha
February 2, 2024 11:55 am 0 comment

மனிதவள திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை பட்டணமும்சூழலும் பிரதேச செயலகமானது, திருகோணமலை நகர சபையின் பொது நூலகத்துடன் இணைந்து இளைஞர்களுக்கு பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வை நேற்று முன்தினம் புதன்கிழமை (31) நடத்தியது.

சர்வதேச புலம்பெயர்தலுக்கான அமைப்பின் மூலம் திருகோணமலை நகர சபை பொது நூலக மண்டபத்தில் நகர சபைச் செயலாளர் வெ.இராஜசேகர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன், பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருகோணமலை நகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் என்.பரமேஸ்வரன், பிரதம நூலகர் நா.யோகேஸ்வரன், நூலகர் றிம்சானா , நூலக உதவியாளர்களான உ.ரஜனிக்காந்தன், அ.அச்சுதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தம்பலகாமம் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT