Monday, May 20, 2024
Home » விபுலானந்தா பொது நூலகத்துக்கு பெறுமதியான நூல்கள் அன்பளிப்பு

விபுலானந்தா பொது நூலகத்துக்கு பெறுமதியான நூல்கள் அன்பளிப்பு

by Gayan Abeykoon
February 1, 2024 4:40 am 0 comment

ஏறாவூர்பற்று பிரதேச சபைக்குட்பட்ட விபுலானந்தா பொது நூலகத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளீதரன் பெறுமதியான நூல்களை வழங்கி வைத்தார்.

சித்தாண்டியில் அமைந்துள்ள விபுலானந்தா பொது நூலகத்திற்கு தேசிய மொழிகள் பிரிவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நூல்கள் அண்மையில் மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் மாணவர்களிடையே கற்றல் செயற்பாட்டை மேம்படுத்துவதுடன் இரண்டாம் மொழி அறிவினை விருத்தி செய்வதற்காக நூல்கள் ஏறாவூர் பற்று பிரதேசசபை செயலாளர் வ.பற்குணனிடம் கையளிக்கப்பட்டது.  இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் வி.சந்திரகுமார், பிரதம முகாமைத்துவ உதவியாளர் கே.எம். றிழா, சித்தாண்டி பொது நூலக உதவியாளர் ஜே.சுகந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT