அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பிரதேச செயலாளர் எம்.ஏ,சீ அகமது ஷாபீரின் ஏற்பாட்டில், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டம், தேசிய காங்கிரஸ் தலைவரும் அட்டாளைச்சேனை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஏ.எல்.எம் அதாஉல்லா (பா.உ) தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேச பாடசாலைகள் அபிவிருத்தி, மைதான அபிவிருத்தி உள்ளிட்ட இன்னும் பல முக்கிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது பற்றிய பல விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பிராந்தியத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. மேலும் வெ ள்ள அனர்த்தங்களை தடுப்பதற்காக விவசாய நிலங்கள், களப்புகள் என்பவற்றை நிரப்புதல், ஆறுகள், மற்றும் நீரேந்து பிரதேசங்களை முறையாக பராமரித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காஸிம், அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ எல்.மஜீட் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள, திணைக்களத்தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
(திராய்க்கேணி தினகரன் நிருபர்)