76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேருவளை சீனன் கோட்டை ஜாமிஅத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீடம் ஏற்பாடு செய்துள்ள சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் 4ம் திகதி கலாபீட வளாகத்தில் காலை 8:00 மணிக்கு அதிபர் மௌலவி எம்.ஏ.எம் அஸ்மிகான் (முஅய்யிதி) தலைமையில் நடைபெறும்.
கலாபீட நிர்வாக சபைத் தலைவர் சட்டத்தரணி எம் ஸீ எம் ஹம்ஸாவின் வழிகாட்டலின் கீழ் நடைபெறும் நிகழ்வில் நாட்டில் சாந்தி சமாதானம் ஐக்கியத்திற்காக விசேட துஆ பிரார்த்தனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
“தாய்நாட்டின் சுதந்திரத்துக்காக தியாகத்துடன் பங்களிப்புச் செய்த தலைவர்கள்” என்ற தலைப்பில் அதிபர் மௌலவி எம் ஏ எம் அஸ்மிகான் (முஅய்யிதி) உரையாற்றுவார். கலாபீட பணிப்பாளர் மௌலவி எம் ஜே எம் பஸ்லான் (அஷ்ரபி) உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொள்வர்.