148
கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி கலாநிதி தில்லைநாதன் சதானந்தன் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
மருத்துவ கற்கைகள் ஆராய்ச்சியியல் துறையிலேயே அவர் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். ‘சமாதானத்துக்கான மருத்துவம்’ (‘Peace Medicine: A Health Care Concern’) எனும் நூலை கலாநிதி தில்லைநாதன் சதானந்தன் அண்மையில் வெளியிட்டு வைத்துள்ளார். இலங்கை சைவப் பண்டிதர் சபையின் சைவப் பண்டிதர், சைவப் புலவர் மண்டூர் தில்லைநாதனின் புதல்வர் சதானந்தன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காரைதீவு குறூப் நிருபர்