திருகோணமலையில் நிர்மாண துறையில் தேர்ச்சிப் பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர் கபில அத்துக்கோரல தலைமையில் நடைபெற்றது.
வளங்கள் தேசிய நிர்மாண சங்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக், கிழக்கு மாகாண சபை செயலாளர் ரத்நாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டத்தில் நிர்மாணத் துறையை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்கியவர்கள் அதிதிகளால் இந்நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.