தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிஸின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் பெப்ரவரி (03) நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக வெளி விவகார அமைச்சு தெரிவித்தது.
தாய்லாந்து பிரதமர் இலங்கையில் தங்கியுள்ள நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட முக்கிய தரப்பினருடன் விசேட பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர் நாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வுகளில் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
அத்துடன் இலங்கை தாய்லாந்துக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் நிகழ்விலும், அவர் பங்கேற்பாரென வெளி விவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.