Friday, May 17, 2024
Home » பொத்துவில் பிரதேச உட்கட்டுமான பணிகளை விரைவில் முன்னெடுக்க நிதி

பொத்துவில் பிரதேச உட்கட்டுமான பணிகளை விரைவில் முன்னெடுக்க நிதி

by damith
January 29, 2024 10:54 am 0 comment

பொத்துவில் பிரதேசத்தில்,வெள்ளத்தால் சேதமடைந்துள்ள உட்கட்டமைப்புகளை மீள் நிர்மாணம் செய்வதற்கு,நிதி ஒதுக்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும்,பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத். தலைவருமான எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள தாக அவர் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (26) பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே முஷரப் எம்பி, மேற்கண்டவாறு கூறினார்.இங்கு உரையாற்றிய முஷாரப் எம்பி:

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், சரியான முறையில் மக்களிடம் சென்றடைய அதிகாரிகள் செயற்பட வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்படும் இக்கூட்டங்கள்,மக்களுக்கு பயனளிக்காவிடின் கூட்டங்களை கூட்டுவதில் பயனில்லை.

அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். கடந்த வருடம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது.

இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகள் அங்கீகரிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

பொத்துவில் பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள், குறிப்பாக விவசாய நீர்ப்பாசன உட்கட்டுமானங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் விரிவாக ஆராயப்பட்டன.அனர்த்தங்களை எதிர்கொள்ளும் முன்னாயத்த திட்டங்கள்

மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்புக்களை மீள்நிர்மாணம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

(ஒலுவில் விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT