Friday, May 3, 2024
Home » போதைப்பொருள் ஒழிப்பு: மேலும் 587 சுற்றிவளைப்புகளில் 579 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு: மேலும் 587 சுற்றிவளைப்புகளில் 579 பேர் கைது

- 8 இலட்சத்து 26 ஆயிரத்திற்கும் அதிக கஞ்சா செடிகள் மீட்பு

by Rizwan Segu Mohideen
January 29, 2024 11:28 am 0 comment

– பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 377 பேர் கைது
– 1,650 போதை மாத்திரைகள் உள்ளிட்ட மேலும் பல போதைப் பொருட்கள் மீட்பு

போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகிக்கும் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி முதல் பொலிஸாரால் ‘யுக்திய’ விசேட சோதனை சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்றையதினம் (28) 587 சுற்றிவளைப்புகளில் 571 ஆண்கள் மற்றும் 08 பெண்கள் உள்ளிட்ட 579 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 06 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகணத்தில் 325 சுற்றிவளைப்புகளில் 322 ஆண்களும் 03 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் 63 சுற்றிவளைப்புகளில் 60 ஆண்களும் 02 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், பிடிவிறாந்து பட்டியலில் உள்ள 377 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (28) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் கைப்பற்றப்பட்ட போதைப்போருட்கள் விபரம்

        • ஹெரோயின் – 142.05 கிராம்
        • ஐஸ் – 94.465 கிராம்
        • கஞ்சா – 1.358 கி.கி.
        • கஞ்சா செடிகள் – 826,847
        • போதை மாத்திரைகள் – 1,650
        • ஏனைய போதைப்பொருட்கள் – 252.934 கிராம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT