197
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை அடுத்த மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாதிவெல எம்.பிக்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை காலி செய்யுமாறு அறிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனிப்பட்ட காரணங்களுக்காக அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர், அவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும். இதன்படி சமிந்த விஜேசிறி அடுத்த மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாதிவெல வீட்டிலிருந்து வெளியேற வேண்டுமென பாராளுமன்றம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.