570
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை மறுதினம் (24) இடம்பெறவுள்ளது.
அதனை முன்னிட்டு , நேற்று (21) கோபுரங்கள் , தூபிகளுக்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து இன்று (22) காலை 7.00 மணி முதல் , நாளை (23) மாலை 5.00 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறும்.
அதனை தொடர்ந்து நாளை மறுதினம் (24) காலை 9.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
யாழ்.விசேட நிருபர்