இஷாக் எம்.பி, ஷெய்க் நூறுல்லாஹ்வினால் திறந்து வைப்பு
அநுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதிக்குட்பட்ட கம்பிரிகஸ் கஸ்வெவ கிராமத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் பாவனைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், அல் ஹிமா இஸ்லாமிய சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நூறுல்லாஹ் (நளீமி) யிடம் விடுத்த வேண்டுகோளின்பேரில் குவைட் நாட்டின் நிதியொதுக்கீட்டில் மேற்படி திட்டம் சுமார் 15 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இக்குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மூலம் கம்பிரிகஸ் வெவ பிரதேசத்தில் வசிக்கும் 250 இற்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கெக்கிராவ குறூப் நிருபர்