Monday, May 20, 2024
Home » மின்விளக்குகள் இல்லாமையால் பொதுமக்கள் பெரும் அசௌகரியம்

மின்விளக்குகள் இல்லாமையால் பொதுமக்கள் பெரும் அசௌகரியம்

by Gayan Abeykoon
January 18, 2024 4:09 am 0 comment

மூதூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தோப்பூர் சந்தியிலிருந்து மூதூர் பெரிய பாலம் வரையிலான மட்டக்களப்பு – திருகோணமலை A-15 பிரதான நெடுஞ்சாலையில் தெரு மின்விளக்குகள் இல்லாமையால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் இரவு நேரங்களில் இப்பகுதி வீதி  இருள்மயமானதாக காட்சிதருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இவ்வீதியூடாக இரவு நேரங்களில் சென்றுவரவேண்டிய பொதுமக்கள் பெரிதும்  சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் மிக தொலைத்தூர இடங்களிலிருந்து இவ்வீதியூடாக மூதூர் தளவைத்தியசாலைக்கு நோயாளர்களைக் கொண்டுசெல்லவேண்டிய நிலைமைகள் ஏற்படும் போது பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு வீதி விளக்குகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

(தோப்பூர் தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT