Tuesday, May 14, 2024
Home » நயினாதீவு அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்

நயினாதீவு அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்

by Prashahini
January 17, 2024 9:58 am 0 comment

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

பிரதிஷ்டா கிரியைகள் இன்று (17) ஆரம்பமானது. தொடர்ந்து வரும் நாட்களில் கிரியைகள் இடம்பெற்று , எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7.00 மணி முதல் , மறுநாள் (23) செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறும்.

அதனை தொடர்ந்து 24ஆம் திகதி புதன்கிழமை காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT