Saturday, May 18, 2024
Home » றிஸ்லி முஸ்தபாவினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
சாய்ந்தமருதில்

றிஸ்லி முஸ்தபாவினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

by mahesh
January 17, 2024 11:30 am 0 comment

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வொலிவேரியன் கிராம மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு Rizley Musthaffa Education Aid Social Service நிறுவனத்தின் பூரண அனுசரணையில் அண்மையில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பைன் ஸ்டார் (FINE STAR) விளையாட்டுக் கழக, சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.எம். றியாஸின் வேண்டுகோளுக்கிணங்க, மாயோன் குரூப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபா, கள விஜயம் மேற்கொண்டு, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து, கலந்துரையாடி அவர்களுக்கான உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாகத்தினர், பைன் ஸ்டார் கழக நிருவாக உறுப்பினர்கள், கழக வீரர்கள், மயோன் குரூப் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT