மூதூர் பொது சுகாதார வைத்தியதிகாரி பிரிவிற்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில் வீட்டுக்கு வீடு நுளம்பு களப் பரிசோதனை நேற்று (14) சுகாதார வைத்தியதிகாரி ஹில்மி முகைதீன் பாவா ஆலோசனையின் அடிப்படையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எம்.றினூஸ் தலைமையில் இடம்பெற்றது
இதன் போது வீட்டின் உட்புறம் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்பு பெருகும் சாத்தியமான இடங்கள் அடையாளம் காணப்பட்டு வீட்டு உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியதோடு அநேக வீடுகளின் வீட்டின் உட்பகுதியில் அதிகமான நுளம்பு குடம்பிகள் அவதானிக்கப்பட்டதையடுத்தும் வீட்டின் உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் மூதூர் பொது சுகாதார வைத்தியதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாரும் இணைந்து பரிசோதனையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்குப் பிறகும் சுத்தம் செய்ய தவறும் பட்சத்தில் உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் பொதுமக்களுக்கு சுகாதார வைத்தியதிகாரி கடுமையான எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தோப்பூர் குறூப் நிருபர்