Home » ‘பொருளாதார நெருக்கடி’ எனும் இருள் அகன்று வழி பிறக்கட்டும்

‘பொருளாதார நெருக்கடி’ எனும் இருள் அகன்று வழி பிறக்கட்டும்

by damith
January 15, 2024 6:00 am 0 comment

நாட்டை சூழ்ந்துள்ள ‘பொருளாதார நெருக்கடி’ எனும் இருள் அகன்று, இலங்கை தேசம் முன்னேற்றம் அடையவும், மக்கள் வாழ்வு மேம்படவும் வழி பிறக்குமென அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

“தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்பது இந்து மக்களின் உறுதியான நம்பிக்கை. எனவே, எமது நாட்டை சூழ்ந்துள்ள ‘பொருளாதார நெருக்கடி’ எனும் இருள் அகன்று, இலங்கை தேசம் முன்னேற்றம் அடையவும், மக்கள் வாழ்வு மேம்படவும் வழி பிறக்கும் என உறுதியாக நம்புகிறேன்.”

அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

” இன்றைய நவீன உலகில் சூழல் பாதுகாப்பு பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஐ.நா.சபையில் தீர்மானங்கள் கூட நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்கள்தான் தமிழர்கள். இயற்கை வழிபட்டு, கொண்டாட்டங்களை நடத்தி சுற்றுசுழலை பாதுகாத்தனர். இம்முறையும் இயற்கைக்கு நன்றி கூறி, இனிமையாக தைத்திருநாளை கொண்டாடுவோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT