Saturday, May 11, 2024
Home » திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வெள்ளத்தால் பாதிப்பு

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வெள்ளத்தால் பாதிப்பு

by Prashahini
January 14, 2024 1:44 pm 0 comment

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வெள்ளப் பாதிப்பு நிலமையை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஸக்கீலா இஸ்ஸதீன் பார்வையிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையும் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து பிராந்திய பணிப்பாளர் மற்றும் பிரிவுத்தலைவர்கள் களத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளரையும் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார்.

நோயாளர்களின் நலன்கருதி முன்னாயத்த நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்பட்டதுடன் டெங்கு மற்றும் ஏனைய தொற்று நோய்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சிகிச்சையளிப்பதில் மாற்று வழிகளை பின்பற்றுமாறும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் அவர்கள் பணிப்புரை விடுத்ததுடன் உயிரியல் மருத்துவப் பொறியியலாளரையும் களத்திற்கு அழைத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணித்தார்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT