284
– சில பகுதிகளில் மணிக்கு 30-40 கி.மீ. வேக காற்று
இன்றையதினம் (14) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும், என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, அம்பாந்தோட்டை, கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.