Sunday, May 12, 2024
Home » 300 கிலோ லீக்ஸ் திருடிய மூவர் கைது

300 கிலோ லீக்ஸ் திருடிய மூவர் கைது

by damith
January 9, 2024 5:55 am 0 comment

விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 300 கிலோகிராம் லீக்​ைஸ திருடிச்சென்று விற்பனைச் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஹோல்டன் தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.

விவசாய தோட்டத்தின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டையடுத்து களவாடிய லீக்​ைஸ நோர்வூட் நகரில் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதில் இருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும், ஹற்றன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் விநாயகமூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT