Sunday, May 12, 2024
Home » திருமலையில் தொடர்மழை; கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறப்பு

திருமலையில் தொடர்மழை; கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறப்பு

- மாவிலாறு நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகளும் திறப்பு

by Prashahini
January 9, 2024 4:20 pm 0 comment

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் இன்று (09) ஒரு அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் சின்தக சுரவீர தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் வெருகல் பிரதேசத்தில் சில வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதுடன், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு ட்பட்ட மாஞ்சோலைச்சேனை, மாஞ்சோலை மற்றும் அண்ணன் நகர் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் எம்.எச்.கனி தெரிவித்தார்.

அத்துடன் மொரவெவ -பேரமடுவ குளங்கள் நிரம்பி வழிவதாகவும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் கே. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

ரொட்டவெவ குறூப் நிருபர் – அப்துல்சலாம் யாசீம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT