Thursday, May 2, 2024
Home » இத்தாலியிலிருந்து அனுப்பப்பட்ட ஹஷீஸ் போதைப்பொருள் மீட்பு

இத்தாலியிலிருந்து அனுப்பப்பட்ட ஹஷீஸ் போதைப்பொருள் மீட்பு

06 கோடி ரூபா பெறுமதி; முகவரும் கைது

by gayan
January 4, 2024 7:20 am 0 comment

இத்தாலியிலிருந்து ஹோமாகம பிரதேசத்திலுள்ள முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள 06 கோடி ரூபாவுக்கும்

அதிக பெறுமதியுடைய 04 கிலோவுக்கும் அதிகமான ஹசீஸ் போதைப் பொருள், சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருள் அடங்கிய பார்சலை விடுவிக்க வருகை தந்திருந்த முகவர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவுப் பொருள் அடங்கிய பார்சல் என்ற போர்வையில் அனுப்பப்பட்டுள்ள இந்த பார்சலை, சீதுவை செரண்டிப் விமானப் பொருட்கள் விடுவிப்பு நிறுவனத்திலிருந்து சுங்கத்திணைக்களத்தின் வருமான கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உணவுப் பொருட்கள் அடங்கிய பார்சல் என்ற பெயரில் இவ்வாறு இத்தாலியிலிருந்து அனுப்பப்பட்டிருந்த பார்சலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.091 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் இதன் பெறுமதி 61. 36 மில்லியன் ரூபா என்றும் சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT