பாகிஸ்தான் டெஸ்ட் தொடரின்போது போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆதரவை வெளியிட போராடியதற்காக அவுஸ்திரேலிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜாவை அந்நாட்டு பிரதமர் அன்தனி அல்பினிஸ் பாராட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் ஐ.சி.சி. கட்டுப்பாடுகளை விதித்தபோதும் கவாஜா காசாவில் கொல்லப்படும் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெயிட்டு வந்தார்.
இந்நிலையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் பேசிய பிரதமர் அல்பினிஸ், “மனிதப் பெறுமானங்களுக்காக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய தைரியத்திற்காக (கவாஜாவுக்கு) நான் பாராட்டுகளை தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.