92
மாத்தளை மாவட்டத்தில் பெய்து வரும் மழையுடன் கூடிய காற்றின் காரணமாக இரத்தோட்ட வெரலுகஸ்தன்ன வித்தியாலய வளவில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் அருகிலுள்ள சில வீடுகளும் வாகனம் ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளன. வெரலுகஸ்தன்ன பாதையின் குறுக்கே இம் மரம் வீழ்துள்ளதால் இவ் வீதியின் வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இவ்வீதியில் உடைந்து விழுந்துள்ள மரக்கிளைகளைகளை அகற்றும் பணியில் இரத்தோட்ட பிரதேச செயலகம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
(மாத்தளை சுழற்சி நிருபர்)