Monday, May 13, 2024
Home » மண்முனை வடக்கில் கலைக்கதம்பம் நிகழ்வு

மண்முனை வடக்கில் கலைக்கதம்பம் நிகழ்வு

by sachintha
December 22, 2023 10:57 am 0 comment

 

மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலை மன்றங்களும் இணைந்து நடத்திய கலைக்கதம்பம் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (19) மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது நடனம், பாடல்கள், கவிதை, பறங்கியர் நடனம் மற்றும் முஸ்லிம் மாணவர்களின் பாடல்கள் போன்ற கலை நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ல.பிரஷாந்தன், மட்டக்களப்பு மாவட்ட உதவி செயலாளர் ஆ.நவேஸ்வரன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர். கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ரூபி வலன்ரீனா பிரான்சிஸ், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சு.சிவரெத்தினம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT