இந்தியா – தென் ஆபிரிக்கா அணிகள் இடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (19) மாலை 4.30 மணிக்கு கெபெர்ஹாவில் நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என தன்வசப்படுத்தும்.
ஸ்ரேயஸ் ஐயர், டெஸ்ட் அணியுடன் இணைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் ரிங்கு சிங்அல்லது ரஜத் பட்டிதாருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அந்த ஆட்டத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோரது வேகத்தில் தென் ஆபிரிக்க அணி 116 ஓட்டங்களில் சுருண்டிருந்தது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் 5 விக்கெட்களையும், அவேஷ்கான் 4 விக்கெட்களையும் எடுத்து அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.