Saturday, May 18, 2024
Home » காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு

- நீர் மட்டம் உயரக் கூடும் என்பதால் அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு

by Prashahini
December 17, 2023 10:13 pm 0 comment

நேற்று (16) இரவு முதல் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளையும் திறக்க நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதனால் களனி ஆற்றின் நீர் மட்டம் உயரக் கூடும் என்பதால் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு கீழே உள்ள களனி ஆற்றை பயன்படுத்தும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தலவாக்கலை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT