Home » கொழும்பில் சகல இன, மத மக்களுக்கும் பொலிஸ் பதிவு
குற்றச்செயல்களை புரிந்த பலர் கொழும்பில் தலைமறைவு

கொழும்பில் சகல இன, மத மக்களுக்கும் பொலிஸ் பதிவு

தமிழ் மக்களை மட்டும் இலக்கு வைக்கவில்லை

by gayan
December 12, 2023 6:58 am 0 comment

மனோ கணேசன் MP யின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் டிரான் அலஸ் பதில்;

பல தடவைகள் விளக்கிக் கூறியும் அவர் குற்றச்சாட்டை முன்வைப்பது கவலை தருவதாகவும் அமைச்சர் தெரிவிப்பு

தமிழர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு கொழும்பு மாவட்டத்தில் தகவல்கள் திரட்டப்படவில்லை எனத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு சகலரதும் தகவல்களும் திரட்டப்படுவதாகத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் தகவல் சேகரிப்பு தொடர்பில் தெளிவுபடுத்தலை கோரினார்.

இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களிடமிருந்து தகவல் பெறும் நடவடிக்கை 90 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளது. இதில் ஒட்டுமொத்த மக்களது தகவல்களும் உள்ளடங்குகின்றன. தகவல்கள் சேகரிக்கும் நடவடிக்கைகளை எந்த விதத்திலும் நிறுத்த முடியாது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தகவல்

தரவு கட்டமைப்பு பேணப்பட வேண்டும். இதற்காகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தகவல்கள் திரட்டப்படுவதாக மனோ கணேசன் எம்.பி சபையில் தவறான கூற்றை முன் வைத்துள்ளார்.கடந்த முறையும் அவர் இதே பிரச்சினையை முன்வைத்த போது, தனிப்பட்ட முறையில் அவரைச் சந்தித்து விளக்கியுள்ளேன்.

கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை 90 வீதமளவில் நிறைவு பெற்றுள்ளன. சிங்களம்,தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் என அனைத்து மக்களும் இந்த தகவல் பதிவுக்குள் உள்ளடங்குகின்றார்கள்.

இது புதிதாக ஆரம்பிக்கப்படவில்லை. யுத்த காலத்தில் இருந்தே இவ்வாறு பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்தந்த பகுதி பொலிஸ் நிலையங்கள் ஊடாக அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதில் தவறொன்றும் கிடையாது.

பெயர் உள்ளிட்ட விபரங்கள் மாத்திரமே கோரப்படுகிறது.நாட்டில் யுத்தம் இல்லாவிட்டாலும் சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT