206
கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் ஏற்படுத்தி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இவ்விடயத்துக்கு எவரும் முன்வராவிட்டால், சம்பள
நிர்ணய சபையை உடனடியாகக் கூட்டி, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார். “கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டதால், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு, சம்பள நிர்ணய சபையினூடாக ஆயிரம் ரூபாவே அதிகரிக்கப்பட்டது. ஆனால், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.