607
நாளை (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும் நேரங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காலத்திற்கு காலம் திருத்தப்படும் கலால் கட்டளைச் சட்டத்தின் 52ஆவது அதிகாரத்தின் 32(1) உப பிரிவின் கீழ், நிதியமைச்சருக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய,
- வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையங்கள்: மு.ப. 8.00 – இரவு 10.00 வரை
- சுற்றுலா சபையால் அங்கீகரிக்கப்பட்ட FL7, FL8 அனுமதிப்பத்திரம் கொண்ட ஹோட்டல்கள் (3
- நட்சத்திரங்கள் மற்றும் அதற்கு மேல்) : மு.ப. 10.00 – அதிகாலை 2.00 வரை
- ஏனைய அனைத்து ஹோட்டல்கள்: மு.ப. 10.00 – நள்ளிரவு 12.00 வரை
மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கும் நேரங்கள் தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் வருமாறு…