– மேலும் சில இடங்களில் பிற்பகலிலும் மழை
மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்தத “Michaung” (மிக்ஜம்) எனும் பாரிய சூறாவளியானது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்துள்ளதுடன், இத்தொகுதி படிப்படியாக வலுவிழந்து கொண்டிருப்பதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, மிக்ஜம் சூறாவளியால் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் ஏற்பட்ட தாக்கம் மேலும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றையதினம் (06) நாட்டின் மேல், தென், வடமேல் மாகாணங்களில், குறிப்பாக காலை வேளையில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.