நாட்டில் கடந்த மூன்று நாட்களில் சுமார் 1,000 பேர் டெங்குத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு சுமார் 300 நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் (NDCU) பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது, மழையுடனான காலநிலை நிலவுவதால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. எனவே, டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டில்,இவ்வருடம் முதல் (2023) டிசம்பர் (04) வரை, மொத்தம் 77,487 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே (16,363) அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,மேல் மாகாணத்தில் 36,266 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.