181
களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
இதன்படி, மருத்துவ பீட விடுதிகள் தவிர்ந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதிகளும் மூடப்பட்டிருக்கும். அதேவேளை அனைத்து
மாணவர்களும் தத்தமது விடுதிகளை விட்டு நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு முன்னர் வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பு கருதியே பல்கலைக்கழக நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளது. நிலைமைகள் சீரான நிலைக்கு வந்த பின்னர் மூடப்பட்ட பீடங்களை திறப்பதற்கு நடவடிக்ைக எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.