ஒக்டோபர் மாதத்திற்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், நாளை (05) முதல் பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி 1,406,932 குடும்பங்களுக்கான 8,775 மில்லியன் ரூபாய் திறைசேரியில் இருந்து வங்கிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலனை செய்யப்பட்டு தெரிவு செய்யப்படுவோருக்கு அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் நிதி வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(2/2) After review of appeals and objections are completed the eligible individuals will receive benefits with effect from July. pic.twitter.com/rWX1GiCWC4
— Shehan Semasinghe (@ShehanSema) December 4, 2023